1 / 5
Sundari Serial Latest Epsiodes!
2 / 5
Sembaruthi Serial Latest Episodes Here
3 / 5
Sathya Serial Latest Epsiodes Here
4 / 5
Kayal Serial Lastest Episodes Here
5 / 5
Oru Orla 2 Rajakumari Serial Lastest Episodes Here!

Kayal Serial: கயலை கலங்க வைத்த அந்த வார்த்தை... தேவியின் கல்யாணம் நடக்குமா?


தங்கையின் கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்று போராடுகிறாள் கயல். அது நடக்காது என்று உறுதியாக சொல்லி விட்டு செல்கிறாள் தங்கை தேவியின் மாமியார். அதைக்கேட்டு கலங்கிப்போய் நிற்கிறாள் கயல்.


மிடில் கிளாஸ் பெண்ணின் கவலைகள், கஷ்டங்களை படம்பிடித்து காட்டுகிறது சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் (Kayal Serial) தினசரியும் இரவு 7.30 மணிக்கு கயலைப் பார்க்க குடும்பத்தோடு அமர்ந்து விடுகின்றனர். கயலுக்கும் எழிலுக்கும் இருக்கும் ரசிகர்கள்தான் அதற்குக் காரணம்.


கயலின் தங்கை தேவிக்கு திருமணம் பேசி முடிக்க அந்த திருமணத்தில் மிகப்பெரிய தடையாக நிற்கிறது எழில் எழுதிய லவ் லெட்டர். அது யார் எழுதியது என்று தெரியாமலேயே எழிலிடம் லவ் லெட்டா பற்றி பேசுகிறாள்.


லவ் லெட்டரை என் பேக்கில் வைத்து விளையாடி விட்டான். உலகத்தில் உள்ள எந்த பொண்ணுக்குமே பிடிக்காது என்று சொல்கிறாள் கயல். இந்த லெட்டரை படித்து விட்டு உங்க சம்பந்தமே வேண்டாம்னு சொல்றாங்க.

Read More!

Sun TV's Sundari Serial Biography




சராசரி பொண்ணோட போராட்டம் ஆம்பிளைங்களுக்கு தெரிய மாட்டேங்குது... ஒரு பொண்ணை பார்த்த உடனே லெட்டர் எழுதி கொடுக்கணுமா? லவ் லெட்டருக்கு பின்னாடி என்ன பிரச்சினை வரும்னு தெரிய மாட்டேங்குது என்று ஆதங்கத்தோடு பேசுகிறாள் கயல்.


காதல் மேல இருக்கிற மரியாதையே போயிருச்சு. நடுத்தர குடும்பத்தில இருக்கிறவங்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கு. கல்யாணங்கிறது ஒரே பிரசவத்தில 10 குழந்தைகளை பெத்துக்கிறதுக்கு சமம் என்று சொல்கிறாள். அதைக்கேட்டு நெருப்பு மேல் நிற்பது போல தவித்துப்போகிறான் எழில்.


ஒரு லவ் லெட்டர் என் தங்கையோட வாழ்க்கை எப்படி புரட்டி போட்டுருச்சு. எப்பவுமே பொண்ணுக்குத்தான் பிரச்சினை என்று சொல்லும் தேவி... அந்த லெட்டரை எழுதினது யார்னு தெரிஞ்சாகனும். அது யார்னு தெரிஞ்சா நான் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன் என்று சொல்ல எழில் முகத்தில் ஈயாடவில்லை.

Read More!

‘சுந்தரி’ அணுவா இது! வித்தியாச கெட்டப்பில் ஸ்ரீகோபிகாவின் புகைப்படங்கள்


கோவிலில் இருக்கும் யாரோ ஒருவரின் கன்னத்தில் அறைந்து நீதான் லெட்டர் எழுதினியா என்று கயல் கேட்க அவனோ, சத்தியம் செய்து நான் எழுதவில்லை என்று சொல்ல கயலுக்கு குழப்பம் அதிகரிக்கிறது.


இந்த லெட்டரில் இருக்கும் கையெழுத்து எனக்கு தெரிந்த கையெழுத்தாக இருக்கிறது என்று கயல் சொல்ல நான் செத்தேன் என்று புலம்புகிறான் எழில். தேவிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலாமே என்று எழில் சொல்ல, அது முடியாது என்று சொல்லி மறுக்கிறாள் கயல். அப்போது ரசிகர்கள் பலரும் ஆட்டோகிராப் கேட்கிறாள்... கயல் கையெழுத்தை யோசிக்கிறான் எழில், அவளை சாமி கும்பிட அனுப்பி விட்டு கையெழுத்து போட்டுத்தருகிறான்.


கயலைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகிறான் தேவிக்கு பார்த்த மாப்பிள்ளை விக்னேஷ். லெட்டரை காரணமாக வைத்து என்னையும் தேவியையும் பிரித்து என்னோட மாமா பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்று சொல்லி அழுகிறான் விக்னேஷ். நாங்க விஷம் குடித்து செத்துப்போகலாம் என நினைக்கிறோம் என்று விக்னேஷ் சொல்ல அதிர்ச்சியடைகிறாள் கயல்.



சாகக் கூடாது வாழ்ந்து காட்டணும் என்று விக்னேஷிடம் அட்வைஸ் செய்கிறாள் கயல். அதற்கு அவனோ ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்று சொல்லி மற்றொரு வெடிகுண்டை வீசுகிறான். அதற்கு சம்மதிக்காத கயல், அனைவரின் ஆசியோடத்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள்.


அதே நேரத்தில் மற்றொரு பிரச்சினை விக்னேஷின் அம்மா ரூபத்தில் வருகிறது. இந்த கல்யாணம் ஒரு போதும் நடக்காது என்று மருத்துவமனையே அதிரும் வகையில் கத்தி கூச்சல் போட அப்படியே கலங்கிக் போகிறாள் கயல். 


திருமணத்தை நிறுத்த பெரியப்பாவின் சதி வேலைகள் ஒருபக்கம் அதிகரிக்கிறது. தேவியின் கல்யாணம் நடக்குமா? என்று நினைத்து கலங்குகிறாள் கயல். அடுத்தடுத்த எபிசோடுகள் இனி பரபரப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

0 Comments

Post a Comment

Your thoughts (0)

Previous Post Next Post